ஜாய்ஸ் M. உல்லார்டு அம்மா அவர்களின் 97வது பிறந்தநாள்
சகோதரி ஜாய்ஸ் உல்லார்டு அம்மா
(இலண்டன் மிஷின் சங்கத்தின் கடைசி மிஷனரி)
இங்கிலாந்து நாட்டில் 11.04.1923ல் பிறந்தவர் 19ம் வயதில் இயேசுவை
இரட்சகராக ஏற்றுக் கொண்டார்
தாதியாக ஆயத்தம்.
தமது 25ம் வயதில் 12.11.1948ல் லண்டன் மிஷின் சங்கத்தின் மிஷினரியாக
பெங்களூர் வந்து சேர்ந்தார்.
ஊழியங்கள்:
பெண்கள் மத்தியில் ஊழியம் செய்ய 1952ல் ஈரோடு வந்து Women Worker ஆக
பணிபுரிந்தார் சிவகிரி பகுதியில் வாழைத்தோட்டம், காரவலசு, பொரசப்பாளையம்
காங்கயம் பகுதியில் கல்லேரி,ரெட்டிபாளையம் கிராமங்களிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள்
மத்தியில் ஊழியம் செய்து அவர்களுக்கு கல்வி கொடுத்து அவர்களோடு தம்மை
இணைத்துக் கொண்டார். அம்மக்கள் வாழ்வில் ஒளி பெற்று உயர்ந்த நிலையில் உள்ளனர்.
ஈரோட்டில் பெண்கள் விடுதி, பெண்கள் உயர் நிலைப்பள்ளி, திருமண்டல அளவில் பல குழுக்களில் கன்வீனராகவும் பணியாற்றிய்ள்ளார் இவரது உழைப்பால் அநேகப்
பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.