Rev W T M Clewes 134 வது பிறந்த நாள் 1891ஆண்டு அக்டோபர் 17 தேதி இங்கிலாந்து நாட்டில் லைய்யி என்ற இடத்தில் பிறந்தார். இந்த நன் நாளில் இவரது நினைவுகளை நினைவு கூற இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்துள்ளார்.
ஈரோடு மாநகர் பகுதியில் ‘குளுஸ் துரை’ அழைக்க பெறும் இவர் பிரப் துரை (Rev A.W Brough) பாப்லி துரை (Rev H.A.Popley) ஆகியோர் ஈரோடு பகுதியில் பணிசெய்த காலத்தில் 1923 ஆண்டு ஈரோடு வந்தார் இவருடன் மனைவிஎடனா ஜோன் பேக்கர் (Edna Jane Baker) வந்தார்கள்.
அன்றைய கால கட்டத்தில்(1923) பிரப் மற்றும் பாப்லி அவர்களும் நிறுவிய பள்ளிக்கூடங்கள் 94ஆகும். இனிமேல் புதிய பள்ளிகளை திறப்பதை விட ஏற்கனவே துவக்கப்பட்டு நடைபெற்றுவருகின்ற பள்ளிகளை பலப்படுத்தி ஒருங்கிணைக்க முடிவெடுத்தார்கள். இதன் பயன்னாக பள்ளிகளின் எண்ணிக்கை உயரவில்லை.
இலண்டன் மிஷன் மூலம் 1923 ஆண்டு குளுஸ் துரை அவர்கள் ஈரோடு பணித்தளத்திற்கு வந்தவுடன் கல்வி முன்னேற்த்திற்கு தனது முழு கவனத்தையும் செலுத்தினார். இவரே கல்வி முன்னேற்றத்திற்கும் முழுக் காரணமாகஇருந்தார். கல்வியில் திறமை மேம்பாடு அடையவும் கிறிஸ்துவ மார்க்கத்தின் தாக்கம்பள்ளிகளில் ஏற்படவும் பெரும் காரணமாக இருந்தவர் இவரே. இன்றும் கூட நமது சி.எஸ்.ஐ ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஒரு பகுதி ‘Clewes Block’ என்று உள்ளது. இதுவே இவரின் கல்விப்பணிக்குசான்று.
குளுஸ் துரை மனைவி எடனா அவர்கள் இவருடன் வந்த போது பிரப் துரையால் தொடங்கப்பட்ட ஈரோடு சி.எஸ்.ஐ மருத்துவமனை 1923 ஆண்டு மருத்துவமனை விரிவு படுத்தப்பட்டு மகப்பேறு மருத்துவ மனையாக மாற்றம் செய்யப்பட்டு முதல் S.R.N யாக Edna Jane Baker அவர்கள் மருத்துவ பணிகளை தொடங்கினார். இவர் மருத்துவ பணிகளை ஈரோடு பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நடைபயணமாகவே சென்று செய்துள்ளார்.
குளுஸ் துரை அவர்கள் 26 ஆண்டுகள் (1923-1949) ஈரோடு பணித்தளத்தில் பணியாற்றி உள்ளார்.1946 ஆண்டு புங்கம்பாடி கிராமத்தில் ஆலயம் இவருடைய பங்களிப்பால் கட்டப்பட்டு 25.12.1946 ஆண்டு ஆலயம்மங்கலப்படைப்பு செய்யப்பட்டது.
இவர் பிறந்த இன் நன் நாளில் இவர் செய்த பணிகளை நினைவுகூறுவோமாக.சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர் நலிவடைந்தோர் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றி சிறூமைப்பட்டவர்கள் மேல் சிந்தையுள்ளவர்கள் பாக்கியவாங்கள் என்ற சத்தியத்திற்கு சான்றாக விளங்கிவர்கள் மிஷனரிகள்.


No comments:
Post a Comment